- காங்கிரஸ்
- பாஜக
- மேகதாது அணை
- அன்புமணி
- பா.ம.க.
- சென்னை
- மாமல்லபுரத்தில்
- தமிழ்
- தமிழ்நாடு
- ராமதாஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு…
சென்னை: மாமல்லபுரத்தில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: ராமதாஸ் வாழும் காலத்தில் பாமக தமிழ்நாட்டை ஆள வேண்டும். 2031ல் பாமக ஆள வேண்டும். சமூக நீதி கணக்கெடுப்பை நடத்தினால், அனைத்து விதத்திலும் தமிழ்நாடு முன்னேறும். தமிழ்நாடு முழுவதும் மேகதாது அணை விவகாரத்தில் நல்ல விழிப்புணர்வை பாமக ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கொடுத்திருக்கக்கூடிய பதில் தமிழ்நாட்டிற்கான துரோகம்.
கர்நாடகத்தில், காங்கிரஸ் கட்சி தற்போது ஆளுங்கட்சியாக இருக்கிறது. மீண்டும், அங்கு ஆட்சிக்கு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சி எண்ணுகிறது. ஆனால், அங்கு பிஜேபி வரவேண்டும் என்று அவர்கள் திட்டம் போடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியும், பிஜேபியும் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரவிடாமல் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். அடிக்கல் நாட்டினால் போதும் வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் திட்டம் தீட்டுகிறார்கள்.
இது, சம்பந்தமாக நான் அறிக்கை வெளியிட்டேன். உடனே இங்கே தமிழ்நாட்டில் புதிதாக வந்திருக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர் சட்டை எல்லாம் மடித்து விட்டுக்கொண்டு ஆவேசமாக பேசுகிறார். நாங்கள், துப்பக்கி சூட்டை, தடியடியை, ஜெயில் என எல்லாத்தையும் பார்த்து விட்டோம். நீங்கள் அப்போது பிறந்துகூட இருக்க மாட்டீர்கள். பாமக தனியாக நின்று எத்தனையோ சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியால் தனியாக நின்று ஒரு கவுன்சிலர் கூட வெற்றி பெற முடியாது. இவ்வாறு அன்புமணி பேசினார்.
* பாமக தலைவராக அன்புமணி தேர்வு
மாமல்லபுரத்தில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில், மீண்டும் அன்புமணியை தலைவராக தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோர் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
