வாகனங்களில் பொருத்தப்படும் வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனத்துக்கு சீரான கட்டணம்

சென்னை: தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து மற்றும் இதர வாகனங்களில் பொருத்தப்படும் வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனம் (Vehicle Location Tracking Device) தொடர்பாக, பல்வேறு இடங்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, வாகன உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் கடந்த 13ம் தேதி தலைமைச் செயலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வாகன இருப்பிட கண்காணிப்பு சாதன உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான மற்றும் நியாயமான விலையில் வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனம் விற்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்படி, வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனம் ஒரு ஆண்டு சந்தாவுடன் மற்றும் 2 சிம் கார்டுகளுடன் ரூ.5,099 மற்றும் ஜிஎஸ்டிக்கு மிகாமலும், கூடுதலாக வழங்கப்படும் ஒவ்வொரு அவசரகால சுவிட்ச்சுக்கு ரூ.150 மற்றும் ஜிஎஸ்டிக்கு மிகாமல் தமிழ்நாட்டில் வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும், என அறிவுறுத்தப்பட்டது. இதற்கு உற்பத்தியாளர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: