ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்கும் தேதி மாற்றம்

சென்னை: ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏக்கள் விளக்கம் இன்று(30ம் தேதி) நடைபெறுவதாக இருந்த நிலையில் ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயகுமார், இசக்கி சுப்பையா மற்றும் சத்யபாமா ஆகியோரிடம், அவர்களது ராஜினாமா தொடர்பான விவகாரங்கள் குறித்து நேரில் விளக்கம் பெறுவதற்காக சட்டப்பேரவை செயலர் அலுவலகம் ஏற்கனவே ஜூலை 30ம் தேதி ஆஜராகுமாறு அழைப்பு விடுத்திருந்தது.

அதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பின் நிலைப்பாடு மற்றும் விளக்கத்தையும் கேட்பதற்காக அவர்களுக்கும் அதே நாளில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இவர்கள் ஆகஸ்ட் 4ம் தேதி சட்டப்பேரவை செயலர் முன்பு ஆஜராகி தங்களது விளக்கங்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: