டெல்லி: 2005ம் ஆண்டு ஒடிசாவில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விடுத்து உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. முறைகேட்டை நிரூபிக்க எந்த வலுவான ஆதாரங்களும் இல்லை என்பதால், சிபிஐ தாக்கல் செய்த வழக்கு மூடல் அறிக்கையை ஏற்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
