மாணவர்களின் போராட்டத்தை நினைத்து ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்பட வேண்டும் – ராகுல் காந்தி

டெல்லி: மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் போராட்டம் நடத்திய மாணவர்களை நினைத்து ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்பட வேண்டும் என்றார். உண்மையில் இந்த நாட்டின் எதிர்காலத் தலைமுறையினர் நம் தெருக்களில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை கண்டு நான் மிகுந்த உற்சாகமும் நம்பிக்கையும் கொண்டேன். இதை அவர்களின் கோபமாகவோ, வன்முறையாகவோ அல்லது வெறுப்பாகவோ எண்ணாமல் இந்நாட்டின் இளைஞர்கள் மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் ஆழமான வெளிப்பாடாக பார்க்க வேண்டும் என்றார்.

பாஜகவில் உள்ள எனது நண்பர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் இந்த உணர்ச்சி வெளிப்பாட்டை மதிக்க வேண்டும். பாஜக-வில் உள்ள எனது நண்பர்கள் தங்கள் சொந்தக் குழந்தைகளிடமே சென்று, சக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னெடுத்த இந்தச் செயல்பாடுகள் குறித்து கேட்டால், அவர்களும் ஆதரிப்பதை காணலாம் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

 

Related Stories: