டெல்லி: மனித-வனவிலங்கு மோதலைக் குறைப்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக உள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “உலகப் புலிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் வாழ்த்துகள். உலகின் புலிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70% சதவீதம் இந்தியாவில் உள்ளன என்பதில் இந்திய மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள். இயற்கையோடு இயைந்து வாழும் நமது பல நூற்றாண்டுகள் பழமையான கலாசாரத்தால் இந்தியாவின் புலி பாதுகாப்பு முயற்சிகள் உத்வேகம் பெறுகின்றன.
புலி பாதுகாப்பை வலுப்படுத்தும் அறிவியல் அடிப்படையிலான பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றிற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். நமது வனத்துறைப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாவலர்களின் முயற்சிகளும் அர்ப்பணிப்பும் புலி பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. அந்த உணர்வோடு, உள்ளூர் சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் மனித-வனவிலங்கு மோதலைக் குறைப்பதிலும் இந்தியா தொடர்ந்து உறுதியாக உள்ளது” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
