×

நான் சென்ற பிறகு தான் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்கள் அதிகரிப்பு: இளையராஜா பரபரப்பு பேச்சு

சென்னை: இளையராஜா எழுதி, இசை அமைத்த ‘பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்’ என்ற ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னை, மியூசிக் அகாடமியில் நடந்தது. நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது: நான் 1980 முதல் 2000ம் ஆண்டு வரை ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தேன்.

நான் மலை சுற்றுவதை பார்த்து தான் அங்கே அதிகம் பேர் கிரிவலம் வர தொடங்கியதாக அங்குள்ள அடியார்கள் சொல்வார்கள். நான் பவுர்ணமியின்போது திருவண்ணாமலை சென்றால் தான் அங்கு மழை வருகிறது என்று சுவாமிகள் கூறினார். நான் திருவண்ணாமலையில் இறங்கும் போதே காலில் செருப்புகள் அணிவதை தவிர்த்துவிட்டேன். நான் அங்கே நடுப்பாதையில் தான் நடப்பேன், அப்போது என் கால்களில் முள் குத்தும் போது சுவாமிகள், நான் செய்த பாவத்திற்கு அனுபவிப்பதாக கூறுவார்.

நான் அடிப்பாதையில் வலம் சென்று உட்காரும் போது அங்கு நான் லிங்கத்துடன் அமர்ந்திருப்பேன். அப்போது நான் தனியாக அமர்ந்திருக்கும் போது மாணிக்கவாசகர் பாடிய பாடலை நினைத்து பார்ப்பேன். அங்கிருந்து வீட்டிற்கு வந்து 3 மாதங்களுக்கு என்னால் கால் எடுத்து வைக்க முடியவில்லை.

மேலும் திருவண்ணாமலையில் இருந்து இங்கு வந்து 3 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் வீட்டில் எழுந்து உட்கார்ந்தபோது தான், ‘பாடிக்கிடைத்த பரம்பொருளே’ என்ற பாடல் எனக்குள் தோன்றியது. இந்த பாடல் நான் எழுதிய தமிழா என்று எனக்கே தோன்றியது. அது இறைவன் கொடுத்தது. இசை என்பதே தெய்வீக கலை. ஆன்மிகம் என்பது தனியாக ஒன்றுமில்லை. நமது வாழ்வே ஆன்மிகம் தான். இவ்வாறு இளையாராஜா பேசினார்.

Tags : Girivalam ,Tiruvannamalai ,Ilayaraja ,Chennai ,Music Academy ,
× RELATED தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்