பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை எப்போது? முடிவெடுக்க 2 வாரம் அவகாசம் கோரும் அரசு

மதுரை: மதுரையை சேர்ந்த நர்மதா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுமுறையை வழங்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் கோரிக்கையை அமல்படுத்துவது தொடர்பாக அரசு ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த மனு நேற்று மீண்டும் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் மோதர்ஷினி ஆஜராகி, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிப்பது தொடர்பாக விதிகளை உருவாக்க அரசு சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்றார்.

அரசு தரப்பில், இதுதொடர்பாக அரசுடன் ஆலோசனை நடத்தி பதிலளிக்க 2 வார கால அவகாசம் தேவை என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், சிறப்பு குழு அமைத்தால் அதில் யார், யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆக.24க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: