சென்னை: பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வந்தே மாதரத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது தமிழ் மீது பற்றுள்ள பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்முறையாக வந்தே மாதரத்துடன் தொடக்கப்பட்டுள்ள பட்டமளிப்பு விழாவாக இன்றைய நிகழ்வு உள்ளது. இந்த விழாவில் வந்தே மாதரத்திற்கு முதலிடம், தேசிய கீதத்திற்கு இரண்டாமிடமும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு கடைசி இடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
