கறம்பக்குடி : கறம்பக்குடி அருகே பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடம் புதிதாக கட்டிதரப்படுமா? என குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பாப்பாபட்டி ஊராட்சி அமைந்துள்ளது.
புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. நாளடைவில் அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து ஆங்காங்கே சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.
தற்போது வரை உள்ளது எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படுத்த கூடும் என்ற சூழ்நிலையில் அங்கன்வாடி மையத்தில் கல்வி பயிலும் குழந்தைகள் மற்றொரு இடத்தில் கல்வி கற்கின்றனர்.
எந்த நேரத்திலும் இடிந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ள பாப்பாபட்டி ஊராட்சி புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படும் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டிடத்தை இடித்து அதே இடத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டி தர வேண்டும் என பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
