சென்னை: பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி மற்றும் எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்துள்ளது . தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . புதுச்சேரி, காரைக்காலுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
