×

‘எந்த நேரத்தில் கணக்கு தீர்க்கணுமோ அந்த நேரத்தில் தீர்க்கணும்’ இலாகா ஒதுக்கீட்டில் தாமதம் ஏனென்று எனக்கே தெரியவில்லை: புதுவை முதல்வர் ரங்கசாமி பேட்டி

 

புதுச்சேரி: இலாகா வழங்க ஏன் கால தாமதமாகிறதென்று எனக்கே தெரியவில்லை என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். தேசிய மாணவர் படை சார்பில், `கடலுக்குப் போவோம் – திட்டம் ஸ்வர்ணம் 2026’ என்னும் பாய்மரப்படகு கடல் சாகச பயண தொடக்க விழா தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு கடல் சாகச பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவியரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். தற்காலிக சபாநாயகர் அன்பழகன், ஐயப்பன் எம்எல்ஏ, புதுச்சேரி தேசிய மாணவர் படையின் குரூப் கமாண்டர் அஷிஷ் திவாரி மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர், இலாகா ஒதுக்கீடு எப்போது வரும்? என்று முதல்வர் ரங்கசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது, `வரும்’ என ஒற்றை பதில் அளித்தார். ஏன் காலதாமதம்? என்று கேட்டதற்கு, `எனக்கே தெரியவில்லை’ என்றார். பாஜ முக்கிய இலாகா கேட்டு அழுத்தம் தருகிறதா? என்று கேட்டதற்கு பதில் தராமல் `வணக்கம்’ என கூறி புறப்பட்டார். செல்லும்போது, `எந்த நேரத்தில் கணக்கு தீர்க்கணுமோ அந்த நேரத்தில் தீர்க்கணும்’ என்று கூறியபடி சென்றார்.

 

 

Tags : Puducherry ,Chief Minister ,Rangaswamy ,National Cadet Corps ,
× RELATED முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர்...