நீட் மனஅழுத்தம் – மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை

 

மும்பை: நீட் மறு தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மனஅழுத்தத்தில் இந்த முடிவை எடுப்பதாகவும், மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறவில்லை என்றும் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெற்றோர் அல்லது சகோதரர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று கடிதத்தில் எழுதியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: