சென்னை: விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை வீட்டுக்காவலில் வைத்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசு தமிழ்நாடு விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி தரக் கோரி வழக்கு தொடர வேண்டும் என கூறி சென்னை தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
