சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கார்கில் வெற்றி நாளில், மிகக் கடுமையான சூழலிலும் ஒப்பற்ற துணிச்சலுடனும் மனஉறுதியுடனும் இந்தியாவை காத்த வீரர்களுக்கு நம் இதயப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறோம். தாய்நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் நினைவைப் போற்றுகிறோம். அவர்களின் குடும்பங்களுக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
