திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் ஆறு, குளம், ஏரிகளில் சட்ட விரோதமாக மணல் கடத்தல் சம்பவம் தொடர்கிறது. முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கோரையாறு படுகையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மினி மணல் குவாரி மற்றும் சட்டவிரோத செங்கல் சூளை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீரையன், முருகையன், முருகானந்தம், பழனிவேல், பாலசுப்பிரமணியன் ஆகிய 5 பேரை கைது செய்து டிஎஸ்பி ராஜு தலைமையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
