×

கனடாவில் இந்திய மாணவியை கழுத்தை நெரித்து கொன்ற ‘லிவ்-இன்’ காதலன்

எட்மண்டன்: பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் சம்ராலா பகுதியைச் சேர்ந்த தாமன்பிரீத் கவுர் (23), உயர்கல்வி கற்பதற்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் வாங்கிய கடன் உதவியுடன் கனடா சென்றார். தென்கிழக்கு எட்மண்டனின் சில்வர்பெர்ரி பகுதியில் வசித்து வந்த அவர், கடந்த 9ம் தேதி தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான காயங்களுடன் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக எட்மண்டன் அவசர மருத்துவக் குழுவினரால் முதலுதவி அளிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாமன்பிரீத் கவுர், தீவிர சிகிச்சைப் பலனின்றி 12ம் தேதி உயிரிழந்தார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. எட்மண்டன் மருத்துவ பரிசோதகர் இந்த மரணத்தை முறைப்படி கொலை வழக்கு என அறிவித்தார். இக்கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய கனடா போலீசார், உயிரிழந்த மாணவியுடன் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்து வந்த அவரது லிவ்-இன் காதலனான ரிடீஷ் குமார் (22) என்பவரை கைது செய்தனர்.

இந்தியக் குடிமகனான இவர் மீது கனடா சட்டப்படி இரண்டாம் நிலை கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பில்லை என போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர். உயிரிழந்த தாமன்பிரீத் கவுரின் பிரேத உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உறவினர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags : Canada ,EDMONTON ,DHAMANPREET KAUR ,SAMRALA AREA ,LUDIANA DISTRICT, PUNJAB ,SILVERBERRY AREA ,SOUTHEAST ,
× RELATED கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில்...