புதுடெல்லி: அமெரிக்க வர்த்தகச் சட்டம் 1974ன் பிரிவு 301ன் கீழ் எடுக்கப்படவுள்ள இறுதி நடவடிக்கைகளை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் கடந்த 23ம் தேதி அறிவித்தது. இதன்படி கட்டாய உழைப்பை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதி மீதான தடைகளை விதித்தல் மற்றும் அமல்படுத்துதல் தொடர்பான இந்தியா உள்ளிட்ட 60 பொருளாதாரங்களின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து வர்த்தக பிரதிநிதி அலுவலகம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந் து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 10சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய வர்த்தகத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக இறுதி நடவடிக்கைகளின் கீழ் இந்தியா அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பின் குறைந்தபட்ச பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.
இது முக்கிய துறைகளில் இந்திய ஏற்றுமதிக்கு ஒப்பீட்டளவில் சாதகமான சூழலை வழங்குகின்றது. தற்போது கூடுதல் வரி ஏதுமின்றி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொதுவான மருந்துகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் குறிப்பிட்ட சில பொருட்கள் போன்ற இந்தியாவின் கணிசமான ஏற்றுமதிப் பொருட்களுக்கு இந்த 10 சதவீத வரி விதிப்பு இல்லை ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
