திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் சின்னத்தாமா (90). இவரது கணவர் பல வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். சின்னத்தாமா தனது மகன் கிருஷ்ணசாமி (62) வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி சின்னத்தாமா மரணமடைந்தார். ஆனால் இந்த விவரத்தை கிருஷ்ணசாமி யாரிடமும் சொல்லவில்லை. தாயின் உடலை வீட்டிலேயே வைத்து பூஜை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணசாமியின் மகள் வீட்டுக்கு வந்தார்.
அப்போது சின்னத்தாமாவின் உடல் வெள்ளைத் துணியால் மூடப்பட்டு அருகில் ஒரு விளக்கும், பூஜை பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. விசாரணையில் 3 நாட்களாக தாயின் உடலுக்கு கிருஷ்ணசாமி பூஜை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசுக்கு கிருஷ்ணசாமியின் மகள் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
