2வது டி20: ஜிம்பாப்வே அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

 

ஹராரே: 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஹராரேவில் நடைபெற்ற வரும் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடர்ந்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Related Stories: