25-7-2026 முதல் 29-7-2026 வரை
எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு ராமபிரான் சீதாதேவி. இலக்குமணருடனும், அருள்தரும் ருக்மணி சத்யபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணருடன் குடிகொண்டுள்ள திருத்தலங்கள் தொண்டை நாட்டில் பல உள்ளன. அவற்றில் சிறப்பு வாய்ந்த சென்னை, நங்கநல்லூர், ராம்நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் விஸ்வரூப தரிசனமாக பக்தர்களுக்கு காட்சி தருவது இத்திருத்தலத்தில் ( தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்குட்பட்டது )மட்டுமே உள்ள சிறப்பு அம்சமாகும்.
ஸ்ரீ ராம ரக்க்ஷை மற்றும் பூர்ண வடைமாலை தரிசனத்திற்கு சிறப்பு வாய்ந்தது. இத்திருக்கோயிலில் திருப்பவித்ரோத்ஸவமானது நிகழும் ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 9ம் தேதி (25.07.2026 சனிக் கிழமை) ஏகாதசி திதி, மூலம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் மாலை 6.00 மணிக்கு பூர்வாங்கம் பூஜைகள் ஆரம்பித்து ஆடி மாதம் 13ம் தேதி (29.07.2026 – புதன்கிழமை) வரை நடக்க உள்ளது.
இதில் 25.07.2026 அன்று மாலை 6.15 மணிக்கு பூர்வாங்கம் ஸ்ரீ பகவத் பிரார்த்தனை, வாஸ்து சாந்தி, 26.07.2026 அன்று காலை 8லிருந்து 10 மணி வரையிலும் பிரதான ஹோமம், பவித்ர மாலை சாற்றுதல், பூர்ணாஹூதி திருவாதாரனம் சாற்றுமறை. இதேபோன்று 28ம் தேதியன்று காலை முதல் இரவு வரையிலும் மஹா பூர்ணாஹூதி விசேஷ திருவாராதனம் சாற்றுமறை, 29ம் தேதியன்று மாலை சுவாமி திருவீதிவுலா புறப்பாடு. பக்த கோடிகள் அனைவரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு அனுமனின் அருள்பெற வேண்டுகிறோம்.
