ஆகஸ்ட் 16ம் தேதி வரை தாம்பரம் – தென்காசி இடையே வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கம்

 

நெல்லை: பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தாம்பரம் – தென்காசி இடையே வாரம் இருமுறை சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. கூட்ட நெரிசலை மையமாகக்கொண்டு தெற்கு ரயில்வே சுதந்திர தினம் வரை பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்க முற்பட்டுள்ளது. அந்த வகையில் தாம்பரத்தில் இருந்து தென்காசிக்கு இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி எண் 06135 தாம்பரம்-தென்காசி வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில் வரும் 30 மற்றும் ஆகஸ்ட் 1, 6, 8, 13, 15 ஆகிய தேதிகளில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 3.30 மணிக்கு தென்காசி வந்து சேரும்.

மறுமார்க்கத்தில், ரயில் எண் 06136 தென்காசி – தாம்பரம் வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில் வரும் 31 மற்றும் ஆகஸ்ட் 2, 7, 9, 14, 16 ஆகிய தேதிகளில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தென்காசியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 3.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலில் 2 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், ஒரு ஏசி சேர்கார் பெட்டி, 14 சேர்கார் பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நடந்து வருகிறது.

Related Stories: