டெல்லி: தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் புதிய மசோதாவை நாளை மறுநாள் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்கிறது. வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதில் வினாத்தாள் கசிவில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கான தண்டனை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டு, 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
