×

வெயில்ல நிக்கிறாங்களே..! தர்ம சங்கடமாக இருந்தது: மாற்றுத்திறனாளிகள் நலன்கருதி டீக்கடையில் சாய்வுதளம் அமைத்துக் கொடுத்த டீக்கடை உரிமையாளர்

தஞ்சை: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தலையாரி தெருவில் முருகேசன் என்பவர் டீக்கடை நடத்தி வருகின்றார். இந்த டீக்கடை வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இவரது கடையில் நான்கு புறமும் உள்ள சுவர்களில் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும்விதமாக பல்வேறு பொன்மொழிகள் எழுதப்பட்டிருக்கும். தினசரி இந்த கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வருகைதந்து தேனீர் அருந்திச் செல்வது வழக்கம். அதேபோல் மாற்றுத்திறனாளிகளும் அவ்வப்போது இந்த கடையில் தேனீர் அருந்துவதற்காக வருவார்கள். கடையின் வாயிலில் சாய்வு தளம் இல்லாததால் மாற்றுத்திறனாளிகளால் இவரது கடைக்குள் சென்று தேனீர் அருந்த முடியாது.

அதனால் மாற்றுத்திறனாளிகள் கடையின் வாசலில் நின்று கொண்டே தேனீர் அருந்துவார்கள். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. நமது கடைக்கு தேனீர் அருந்தவரும் மாற்றுத்திறனாளிகள் வெயிலில் நிற்கிறார்களே? என்பதை உணர்ந்த டீக்கடை உரிமையாளர் முருகேசன் மாற்றுத்திறனாளிகள் கடைக்குள்வந்து செல்வதற்கு ஏதுவாக ஒரு சாய்வுதளத்தை ஏற்படுத்தினார். இந்த சாய்வுதளம் ஏற்படுத்தப்பட்டதன் மூலம் தற்போது மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமமுமின்றி டீக்கடைக்கு சாய்வுதளம் மூலம் ஏறிச் சென்று வெயிலின் தாக்கத்திற்கு ஆளாகாமல் மிகவும் மகிழ்ச்சியாக தேனீர் அருந்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் சாய்வுதளம் அமைத்துக் கொடுத்த டீக்கடை உரிமையாளர் முருகேசனுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இன்று மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து முருகேசன் டீக்கடைக்கு சென்று அவருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது மாற்றுத் திறனாளிகள் கூறுகையில்,
மாற்றுத்திறனாளிகள் எனது கடைக்கு டீ குடிக்க வரும்போது வெயில்ல நிக்கிறாங்களே என்று எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அதனால் என்னால் முடிந்தளவிற்கு இந்த சாய்வு தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறேன். விரைவில் கைப்பிடியும் அமைத்துக் கொடுப்பேன் அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று நான் சொல்ல மாட்டேன் என்னுடைய மனதில் உள்ளவர்கள் என்று தான் சொல்வேன் என்று என்றார். டீக்கடை நடத்திவரும் முருகேசன் தனது கடையை வாடகைக் கட்டடத்தில் தான் நடத்தி வருகிறார். வாடகை கட்டடத்தில் நடத்தி வந்தாலும், மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகிறார்களே? என்று உடனடியாக சாய்வு தளம் அமைத்துக் கொடுத்துள்ளார். மனிதநேயம் உள்ள அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இது குறித்து டீக்கடை உரிமையாளர் முருகேசன் கூறுகையில்,
மாற்றுத்திறனாளிகள் எனது கடைக்கு டீ குடிக்க வரும்போது வெயில்ல நிக்கிறாங்களே? என்று எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அதனால் என்னால் முடிந்தளவிற்கு இந்த சாய்வு தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறேன். விரைவில் கைப்பிடியும் அமைத்துக் கொடுப்பேன் அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று நான் சொல்லமாட்டேன். என்னுடைய உள்ளத்தில் குடி கொண்டிருப்பவர்கள் என்றுதான் சொல்வேன் என்றார்.

மனிதநேயத்துடன் நடந்து கொண்ட டீக்கடை உரிமையாளர் முருகேசனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags : Dharma ,THANJAI ,MURUKESAN ,THALIARI STREET, PATUKKOTA, ,DISTRICT ,
× RELATED வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில்...