×

கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை

கோத்தகிரி : கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இந்த காலநிலை மாற்றத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது.
நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள நிலையில் நேற்று கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது.

நேற்று முன்தினம் இரவு முதல் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வந்தது. நேற்று காலை முதலே கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மிதமான காலநிலை நிலவி சாரல் மழை பெய்தது.கோத்தகிரியில் இருந்து ஊட்டி, குன்னூர் செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெஸ்ட்புரூக், கட்டபெட்டு, பாக்கியநகர், அம்பேத்கர் நகர், பேரார், மைனலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சாரல் மழை பெய்தது.

கோத்தகிரி, ஊட்டி, குன்னூர் செல்லக்கூடிய மலைப்பாதை சாலைகளில் மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டதால் பகல் நேரத்திலும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை அடையாளம் கண்டு கொள்ள வாகனங்களில் முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர். தொடர்ந்து காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவி வந்ததால் பொதுமக்கள், சாலையோர வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags : Kotagiri ,Meteorological Department ,Nilgiris district ,
× RELATED ஆலங்குடி சாலையில் உள்ள கேப்பரை...