×

டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் மதுரை சோழவந்தான் ரயில் நிலையில் இந்தி எழுத்துகளை அளித்த வழக்கறிஞர் கைது

மதுரை: நீட் தேர்வுக்கு எதிராகவும், டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் மதுரை சோழவந்தான் ரயில் நிலையில் மற்றும் தபால் நிலையத்தின் பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துக்கள் அளிக்கப்பட்டது. மேலும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், மாணவர்களுக்கு ஆதரவாகவும் வாசகங்கள் எழுதி இந்தி எழுத்துக்கள் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இது தொடர் சோழவந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்தி எழுத்துகளை அளித்த மர்மநபரை தேடிவந்தனர். இது தொடர்பாக அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சோழவந்தான் கீழப்பச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் யுவராஜ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து யுவராஜை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நீட் தேர்வுக்கு எதிராக சோழவந்தான் பகுதியில் ரயில் நிலையம் மற்றும் தபால் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அளித்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் சோழவந்தான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Delhi ,Madurai ,Madurai Chozhavandan ,NEET ,EU government ,
× RELATED எதிர்ப்புகளுக்கு பணிந்தது ஒன்றிய...