- காசிமேடு
- ஆந்திரப் பிரதேச காவல்துறை மற்றும் மீன்வளத் துறை
- எடப்பாடி
- சென்னை
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- ஆந்திரப் பிரதேச மாநில ஊரா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆந்திரா
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆந்திர மாநில அரசு தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் ஆந்திர கடற்கரை பகுதியில் மீன்பிடி தொழில் செய்யக்கூடாது என்று கூறி, 17.6.2026 அன்று காசிமேடு துறைமுகத்தை சேர்ந்த 7 விசைப் படகுகளை பறிமுதல் செய்துள்ளது. இதுவரை தமிழக அரசு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆந்திர அரசு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை விடுவிக்க தவெக அரசின் முதல்வர் உடனடியாக முயற்சிக்க வேண்டும். இனியும் காசிமேடு மீனவர்கள், ஆந்திர அரசு அதிகாரிகளால் துன்புறுத்தப்படாமல் இருப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
