×

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக மாணவரணி சாலை மறியல்: உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

 

உளுந்தூர்பேட்டை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உளுந்தூர்பேட்டையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட திமுக மாணவரணி மற்றும் இளைஞரணியினர் 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், டெல்லியில் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் உடனே பதவி விலக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகில் இன்று திமுக மாணவரணி மற்றும் இளைஞரணி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அதை ஏற்க மறுத்த திமுகவினர் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் குருராஜ், இளைஞரணி அமைப்பாளர்கள் முருகவேல், மனோபாலன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக் கட்டாக கைது செய்து வேன்களில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Tags : DMK ,NEET ,Ulundurpet ,
× RELATED கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில்...