×

கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஜாகீர் என்பவர் அடித்துக் கொலை!!

சென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில், கொலை வழக்கில் கைதாகிச் சிகிச்சையில் இருந்த மனநலன் பாதிக்கப்பட்ட கைதி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த ஆழியார் பகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஜாகீர் (27) என்பவர் கைதானார். இதையடுத்து வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், மனநலமும் பாதிக்கப்பட்டிருந்ததால் நீதிமன்ற உத்தரவுப்படி பொள்ளாச்சி கிளைச் சிறையிலிருந்து சென்னை கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி அதே காப்பகத்தில் சிகிச்சையிலிருந்த அரவிந்த்சாமி என்ற மற்றொரு மனநலன் பாதிக்கப்பட்ட கைதி, ஜாகீரைக் கைகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் ஆபத்தான நிலையில், பலத்த காயமடைந்த ஜாகீர், உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலகக் காவல் நிலையப் போலீசாரும், மருத்துவத் துறை உயர் அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Zagir ,Government Mental Health Archive ,Chennai ,Aaliyar ,Goa ,
× RELATED தமிழ்நாடு, புதுவையில் அமைச்சர் அமித்ஷாவின் 2 நாள் பயணம் திடீர் ரத்து