குஜராத்தை புரட்டி போட்டு வரும் தென்மேற்கு பருவமழை.!! 3 நாட்களாக தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சூரத்: நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், குஜராத்தை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். குஜராத்தின் அகமதாபாத், சூரத், அம்ரிலி, வல்சாத், நவ்சாரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடக்கு, தெற்கு குஜராத், சௌராஷ்ட்ரா ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அகமதாபாத் நகரில் பெய்யும் கனமழை காரணமாக சாலைகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது.

பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வல்சாத் மாவட்டத்தில் கடந்த 16 மணி நேரத்தில் 110செமீ மழை பெய்த நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அம்பர்கான் என்ற இடத்தில் மேகவெடிப்பு போன்று கொட்டி தீர்த்த கனமழையால் வாப்பி என்ற பகுதியே வெள்ளத்தில் மிதக்கிறது.

வல்சாத் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் ஒட்டகம் ஒன்று அடித்து செல்லப்பட்டது. குஜராத்தை மாநிலத்தில் கனமழை காரணமாக பல தாழ்வான இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உமர்காம் என்ற இடத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,064 மி.மீ என்ற வரலாற்றுச் சாதனை அளவிலான மிக கனமழை பதிவாகியுள்ளது. இது இந்திய வானிலை வரலாற்றிலேயே பதிவான 3-வது மிக அதிகபட்ச ஒருநாள் மழையாகும். அவுரங்கா, பார், டாமன் கங்கா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர மழை எச்சரிக்கை காரணமாக வல்சாத், சூரத், வாபி, தஹோத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: