×

மின் வாரியத்தினர் புதிய மின்மாற்றி அமைக்காமல் அலைகழிப்பு; கருகும் பயிர்களால் விவசாயிகள் கவலை

 

பெரணமல்லூர் ஜூலை 24: பெரணமல்லூர் அருகே திருட்டு போன மின்மாற்றிக்கு மாற்றாக புதிய மின் மாற்றி அமைக்காமல் மின்வாரியத்தினர் அலைகழித்து வருவதால், ஆடி பட்டம் பறிபோகும் நிலையில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் தொடர் மின்வெட்டு தமிழக முழுவதும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றனர்.இந்நிலையில், பெரணமல்லூர் பகுதியில் கடந்த மாதத்தில் பல்வேறு இடங்களில் மின்மாற்றியில் காப்பர் ஒயர் மற்றும் ஆயில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இதில் ஆவணியாபுரம் ராஜபாட்டை சாலையில் விவசாயி ஒருவரது நிலத்தில் இருந்த மின்மாற்றியிலும் திருட்டு சம்பவம் நடந்தது‌. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags : Peranamallur ,Tamil Nadu… ,
× RELATED திருவண்ணாமலை மாவட்ட அரசு...