டெல்லி: வினாத்தாள் கசிவுகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. லட்சக்கணக்கான மாணவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பாதிக்கக்கூடியது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மறு தேர்வு நடத்தப்பட்டது. வினாத்தாள் கசிவு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும். வினாத்தாள் கசிவை தடுக்க நாடாளுமன்றத்தில் மசோதாவும் நிறைவேற்றப்படும்” என வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
