சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 4 நாளில் பவுனுக்கு ரூ.2,920 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. அதன்படி, கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,200க்கு விற்பனையானது.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,760க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,430க்கும், பவுனுக்கு ரூ.1680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7,440க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது.
நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,500க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1, லட்சத்து 8000க்கும் விற்றது. இதன் மூலம் தங்கம் விலை தொடர்ந்து 4 நாளில் பவுனுக்கு ரூ.2,920 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நேற்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
