டெல்லியில் மாணவர்கள் போராட்டம் காரணமாக 2வது நாளாக 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

டெல்லி: டெல்லியில் மாணவர்கள் போராட்டம் காரணமாக 2வது நாளாக 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை 16 மெட்ரோ ரயில் நிலையங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கரப்பன்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். காவல்துறையினர் மற்றும் சிஆர்பிஎப் படை வீரர்கள் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றனர். இந்த நிலையில் 4வது நாளக டெல்லியில் இளைஞர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் உள்ள முக்கிய இடங்களுக்கு அருகே உள்ள லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சௌக், படேல் சௌக், ராமகிருஷ்ண ஆசிரம மார்க், பாரகாம்பா சாலை, உச்ச நீதிமன்றம், சேவா தீர்த்தம், ஜன்பத், மண்டி வீடு, மத்திய செயலகம், ஐடிஓ, தில்லி கேட், இந்திரபிரஸ்தம், கான் சந்தை, ஜோர் பாக், சிவாஜி அரங்கம் ஆகிய 16 மெட்ரோ நிலையங்களை மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: