தேச நலனிற்கு எதிராக செயல்படும் கரப்பான் பூச்சிகளால் எந்த பயனும் கிடையாது: நயினார் நாகேந்திரன் சொல்கிறார்

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நமது நாடு வல்லரசு நாடுகளின் வரிசையில் தலைநிமிர்ந்து நிற்கும் நேரத்தில், நமது நாட்டின் நிலையான பொருளாதார முன்னேற்றத்தை சீர்குலைக்கவும், மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தவும் கரப்பான் பூச்சி ஜனதா இயக்கத்தினர் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்ற போர்வையில் சூழ்ச்சிகள் செய்து தேச நலனிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் நீட்டை ஒழிக்க வேண்டுமென்று கூக்குரலிடுகிறார்கள். கரப்பான் பூச்சிகளால் எப்படி நமக்கு எந்தவொரு பயனும் இல்லையோ, அதைப்போலத்தான், கரப்பான் பூச்சி இயக்கத்தினரால் நம் நாட்டிற்கும் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: