- சிபிஐ
- அன்புமணி
- சென்னை
- பா.ம.க.
- திருநெல்வேலி
- தென்காசி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரளா
- கன்னியாகுமரி மாவட்டம்
- கேரளா...
சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு கனிமவளங்கள் கடத்தப்படுவது தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தின் வழியாக கனிமங்களை கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், தமிழ்நாட்டையும், கேரளத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை வழியாக கனிமங்கள் கடத்தப்படுவது மட்டும் தான் நிறுத்தப்பட்டிருக்கிறதே தவிர, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு தொடர்ந்து கனிமம் கடத்தப்படுவது கவலையளிக்கிறது.
கனிம கொள்ளையை கட்டுப்படுத்துவதற்காகாக தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் எந்த பயனும் விளையவில்லை. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். எந்த அளவுக்கு கனிம கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிம கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் கனிமவள கொள்ளையை அரசு முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
