×

துணை ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை: துணை ஜனாதிபதி இன்று தமிழகம் வருவதை முன்னிட்டு கோவையில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டதோடு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் டெல்லியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு கோவை விமான நிலையம் வர உள்ளார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மாலை 5 மணியளவில் பாப்பநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் தனியார் மருத்துவமனையின் நர்சிங் கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரும் கலந்து கொள்கிறார்.

பின்னர், நிகழ்ச்சியை முடித்து கொண்டு துணை ஜனாதிபதி காரில் இரவு 7 மணிக்கு திருப்பூர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர் வீட்டுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு, இரவு 11.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நேற்று (21ம் தேதி) காலை 11 மணி முதல் நாளை (23ம் தேதி) காலை 11 மணி வரை (48 மணி நேரம்) உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு, லட்சுமி மில், ஜிகேஎன்எம், மருத்துவமனை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சித்ரா, நேரு நகர், காளப்பட்டி, சின்னியம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டு டிரோன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Tags : Vice President ,Tamil Nadu ,Goa Goa ,Goa ,C. B. ,Radhakrishnan ,Delhi ,Goa Airport ,
× RELATED விளாத்திகுளம் அருகே அங்கன்வாடியில்...