×

செஞ்சி அருகே சாலை பணியை விரைந்து முடிக்க கோரி டவுன் பஸ் சிறைபிடிப்பு

*அதிகாரி பேச்சுவார்த்தை

செஞ்சி : விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருங்குழி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை பணி தொடங்கப்பட்டுள்ளது. அப்போது ஜல்லி போடப்பட்டு தார்சாலை போடாமல் பாதியிலேயே அப்படியே பணி நின்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜல்லி மட்டும் போடப்பட்டு 6 மாதமாக கிடப்பில் உள்ளதால் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளதாகவும், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் சாலை பணியை மீண்டும் துவங்கி விரைந்து தார்சாலை அமைக்க வேண்டும் என கோரி நேற்று அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வல்லம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் இளவரசி போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சாலை பணியை விரைந்து முடித்துக் கொடுப்பதாக அவர் உறுதியளித்ததன் பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Kori Town ,Chenxi ,Karanguzhi ,Vallam Union ,Viluppuram District ,JALLEY ,Jelly ,
× RELATED தமிழகத்திலும் மாணவர்கள் மீது போலீஸ்...