டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதற்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தடியடி தொடர்பான வீடியோக்களை தான் வைத்துள்ளதாக வழக்கறிஞர் கூறிய நிலையில், வீடியோக்களை பார்க்க நேரம் இல்லை, பார்க்கவும் விரும்பவில்லை என தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியுள்ளார்.
