பழனி நில மோசடி தொடர்பாக தவெக அரசை கண்டித்து வரும் 25ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!

சென்னை: பழனி கோயில் நில பத்திரப்பதிவு மோசடி தொடர்பாக தவெக அரசை கண்டித்து அதிமுக வரும் 25-ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. பழனி கோயில் நில பத்திரப்பதிவு மோசடி தொடர்பாக வழக்கை சிபிஐ விசாரிக்க அதிமுக பொதுச்செலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை பத்திரப்பதிவு செய்த தவெக அரசை கண்டித்து நடுநிலையோடு வழக்கை நடத்துவதற்காக சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க வலியுறுத்தி திண்டுக்கல் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் வரும் ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் என அதிமுக பொதுச்செலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஜூலை 25 (சனிக்கிழமை) காலை 9:30 மணிக்கு மத்திய பேருந்து நிலையம் அருகே  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதிமுகவின் பொருளாளராகவும் முன்னாள் அமைச்சராகவும் உள்ள திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வாயிலாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

Related Stories: