சென்னை: பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: சீர்காழியில் தவெக ஒன்றிய துணைச் செயலாளராக உள்ள ‘ஜில்லா மணி’ என்பவர் முதியவர் ஒருவரை காரில் வைத்து தாக்கும் வீடியோசமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது பழைய வீடியோ என்று விளக்கம் அளிப்பதால் மட்டும் இந்த மனிதாபிமானமற்ற செயல் நியாயமாகிவிடாது. சமத்துவம் பேசும் தவெகவின் கொள்கை வெறும் முழக்கம் மட்டும் தானா?. தவெக விஜய் தலைமை உடனடியாக ‘ஜில்லா மணி’ மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
