×

சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக ஓய்வுபெற்ற ஆர்டிஓ, தொழிலதிபர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியது

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ஓய்வு பெற்ற வட்டார போக்குவரத்து துணை ஆணையர் மற்றும் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தும் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, ஆவணங்களை பறிமுதல் செய்தனர். சென்னை தேனாம் பேட்டையில் ஓய்வு பெற்ற வட்டார போக்குவரத்து துணை ஆணையர் தரணிதரன் வசித்து வருகிறார். இவரது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை தனியாக அவர் மீது வழக்கு பதிவு செய்து, நேற்று அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் நடந்து வரும் சோதனையில், வழக்கு தொடர்பாக ஆவணங்கள், வங்கி பாஸ் புத்தகங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், திருவொற்றியூர் பத்மநாபா காலனி 3வது தெருவை சேர்ந்தவர் முருகேசன் (70). தொழிலதிபரான இவர் வசந்தம் என்ற பெயரில் டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இதுதவிர அவரது மகன்கள் ராஜேஷ் மற்றும் அருண் ஆகியோர் ஷிப்பிங் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனமும் நடத்தி வருகின்றனர். இதில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று காலை 6 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள், தொழிலதிபர் முருகேசன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். 5 மணி நேரம் சோதனையில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : Enforcement Directorate ,RTO ,Chennai ,
× RELATED அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள்...