டெல்லி: டெல்லியில் நேற்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடந்த இளைஞர்கள் பேரணி தொடர்பாக 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாடாளுமன்றம் நோக்கி சென்ற பல்லாயிரம் இளைஞர்களால் நேற்று பதற்றமான சூழல் ஏற்பட்டது. காவலர்கள் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்த நிலையில் அத்துமீறியதாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டனர். கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டத்தால் டெல்லியில் 2வது நாளாக பதற்றம் தொடர்கிறது.
