×

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

கடலூர்: நெய்வேலி பிளாக்-5 சேர்ந்தவர் அருள்முருகன் . என்எல்சி ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி நெய்வேலி பெரியார் சாலை பிளாக் 3 ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் அருள்முருகன் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே அருள்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இறந்த என்எல்சி ஊழியர் அருள் முருகன் குடும்பத்தினர் கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா, சசிதரன் ஆகியோர்கள் மூலம் நஷ்ட ஈடு வழக்கு நெய்வேலி சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இறந்த அருள்முருகன் குடும்பத்தாருக்கு ஒரு கோடியே 74 லட்சத்து 96 ஆயிரம் மற்றும் வட்டியுடன் என மொத்தம் ரூ. 2.02 கோடி நஷ்ட ஈடு வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு சார்பு நீதிபதி பி.முருகன் உத்தரவிட்டார்.

Tags : Cuddalore ,Arulmurugan ,Neyveli Block-5 ,NLC ,Neyveli Periyar Road Block 3 Roundana ,
× RELATED தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றம்...