மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு திட்டமிட்டபடி செப்டம்பர் 17ஆம் தேதி நடத்த முடிவு என்று கோயில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளது. வீரவசந்தராயர் மண்டப புணரமைப்பு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்து விடும் என அரசு தரப்பில் உயர்நீதிமன்ற கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. புதிய நவீன சமையலறை அமைப்பதற்கான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
