நீடாமங்கலம், ஜூலை 20: நீடாமங்கலத்தில் தமுஎக சங்க கூட்டம் நடந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நீடாமங்கலம் கிளையின் சார்பாக அமைப்பு தின வார விழா கூட்டம் எல்விஎஸ் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளையின் தலைவர் சேது சந்தான ராமன் தலைமையேற்று நடத்தினார். கிளையின் முன்னாள் செயலாளர் முனியாண்டி முன்னிலை ஏற்றார். பொருளாளர் நிரோஷா கிஷோர் குமார் வரவேற்புரை கூறினார். மாவட்ட துணை செயலாளர் அந்தோணி பாஸ்கர் துவக்க உரை ஆற்றினார்.
மாநில மாவட்ட முடிவுகள் குறித்தும் கிளையின் செயல்பாடுகள், நடந்துள்ள வேலைகள், 2026-27 காண உறுப்பினர் பதிவை ஜூலை 31க்குள் நிறைவு செய்வது, கலை இலக்கிய இரவு நடத்துவது. மற்றும் எதிர்கால பணிகள் குறித்து மாவட்ட துணை தலைவரும் கிளை செயலாளருமான அம்பிகாபதி விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் கிளை துணைத் தலைவர் ராஜா, துணை செயலாளர் ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் பிலிப் ராஜ், கிஷோர் குமார், மற்றும் முனீஸ்வரன், ரணதிவே, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் கிளை உறுப்பினர் மாணவி அட்சரா நன்றி கூறினார்.
