மன்னார்குடி, ஜூலை 20: மன்னார்குடியில் பகுதிகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் உடனடி அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் திருவாரூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் உணவு பொருட்கள் கையாளும் அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்து உணவு மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி, ஆய்வக அறிக்கை பொருத்து, நீதிமன்றத்தில் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரி டம் வழக்கு பதிவு செய்யப்படும். நீதிமன்றத்தை பொறுத்த வரையில் சிறை தண்டனையுடன் அபாரதம் விதிக்கப் படும், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் அபாரதம் மட்டும் விதிக்கப்படும். ஆனால், தற்போது தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் மேலும் அதிகாரம் வழங்கி கீழ்கண்ட விவரப்படி உடனடி அபராதம் (ஸ்பாட் பைன்) விதிக்கப் பட்டு வருகிறது.
அவை, கலப்படமான உணவு பொருட்கள் கையாள்வது , லேபிள் இல்லாமல் அல்லது லேபிள் விவரங்கள் முழு மையாக இல்லாமல், உணவு பொருட்கள் தயார் செய்தல், விற்பனை செய்தல், உணவு பொருட்களில் சம்மந்த மல்லாத பொருட்கள் இருந்தால், உணவு பாதுகாப்பு அலுவலரின் வழிகாட்டுதல்படி நடக்காத போதும், சுகாதார மற்ற முறையில் உணவு பொருட்கள் தயார் செய்வது, பதிவு சான்று மற்றும் உரிமம் இல்லாமல் தொழில் மேற் கொண்டால், போன்றவைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், அயோடின் இல்லாத உப்பு விற்பனை செய்தால் ரூ.5 ஆயிரம் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்றவைக்கு ரூ.25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையும், உணவு பொருட்கள் பேக் செய்வதற்கும், சப் ளை செய்வதற்கும், உணவு தரம் இல்லாத பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரமும், உரிமம் மற்றும் பதிவு ரத்து செய்தல் போன்றவை மேற்கொள்ளப் படும். இவ்வாறு உணவுப் பாதுகாப்பு துறை திருவாரூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் திருப்பதி தெரிவித்துள்ளார்.
