முத்துப்பேட்டை அருகே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வாலிபர் கைது

 

முத்துப்பேட்டை, ஜூலை 20: முத்துப்பேட்டை அருகே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கீழப்பெருமழை மேல தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் மகன் சுப்பையன்(38). இவர் மீது திருக்கறைப்பூண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. இதில் அவர் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று எடையூர் இன்ஸ்பெக்டர் தண்டாயுதபாணி தலைமையில் போலீசார் இளைஞர் சுபையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: