பொன்னமராவதி அருகே மின் கசிவால் கூரை வீட்டில் தீ ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

 

பொன்னமராவதி, ஜூலை 20: பொன்னமராவதி அருகே மின் கசிவால் கூரை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தற்காலிக பேருந்து நிலையம் அருகே தொட்டியம் பட்டி கிராமம், காமராஜர் நகரை சேர்ந்த விஜய். இவர் குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்தார். நேற்று அதிகாலை மின் கசிவால் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் ஆஸ்பெட்டாஸ் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்க பணம், ரேஷன் கார்டு, பான் கார்டு, பிறப்புச்சான்று மற்றும் இதர ஆவணங்கள், தளவாடச்சாமான்கள் உட்பட இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: