இரை தேடி பயணம் தஞ்சை பெரிய கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகரித்து காணப்பட்ட சுற்றுலா பயணிகள் கூட்டம்

 

தஞ்சாவூர், ஜூலை 20: விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. தமிழர்களின் கட்டடக்கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வரும் பெரிய கோயிலைக் காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை புரிந்து பெரிய கோயியில் அழகைக் கண்டு ரசிக்கின்றனர். பலர் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாகவே பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று காலையிலிருந்தே கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகமாக காணப்பட்டது. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டமாக நிரம்பி வழிந்தது. பலர் தங்களது குடும்பத்துடன் வந்து பெரிய கோவிலின் கட்டிடக்கலையை பார்த்து ரசித்தனர்.‌ புல் தரையில் அமர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகர், கருவூரார், நடராஜர், தட்சிணாமூர்த்தி, மகா நந்தி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். நேரம் செல்ல செல்ல சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் கோவிலுக்கு எதிரே உள்ள வாகனம் நிறுத்தம் இடங்கள் முழுவதும் நிரம்பி வழிந்தது.

இதனால் சீனிவாசபுரம் சாலை, பழைய கோர்ட் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதன் காரணமாக பெரிய கோவில் பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெளியூரில் இருந்து வந்திருந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பஸ், கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்திருந்தனர். கோவிலுக்கு எதிரே உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தினர். ஆனால் நேரம் செல்ல செல்ல அதிக அளவில் வாகனங்கள் வந்ததால் வாகனம் நிறுத்துமிடங்கள் முழுவதும் வாகனங்களால் நிரம்பி வழிந்தது.

இதனால் இடமின்றி பக்தர்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தினர். பழைய கோர்ட் சாலை, சீனிவாசபுரம் சாலை, பெரிய கோவில் சாலை உள்ளிட்ட பெரிய கோவிலை சுற்றியுள்ள சாலை ஓரங்களில் ஏராளமான நிறுத்தப்பட்டிருந்தன. மேலும் கட்டுக்கடங்கு கூட்டம் காணப்பட்டதால் பெரிய கோவில் முன்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

 

Related Stories: